Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி.! 14-பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு.!!

Senthil Velan
திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:48 IST)
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. 
 
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொலை குற்றத்திற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். 
 
காவல் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர். இதில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.  
 
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறை கைதியை சட்டவிரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் மீது விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிவக்குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென்றும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலக்ஷ்மி மற்றும்  சிறை அதிகாரிகள் என 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளனர். 


ALSO READ: புதிய தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்துங்கள்.! முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்..!


சம்பந்தப்பட்ட சிறைத்துறை டிஐஜி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments