Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியாக படிக்காத மாணவியை அடித்த ஆசிரியர். வழக்கு போட்ட பெற்றோர்..!

Advertiesment
classroom

Mahendran

, சனி, 31 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
சரியாக படிக்காத மாணவியை ஆசிரியர் அடித்த நிலையில் அவர் மீது மாணவியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாகான் என்ற கிராமத்தில் உள்ள ஆறு வயது சிறுமி நன்றாக படிக்கவில்லை என்றும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவரது ஆசிரியர் சிறுமியை அடித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி, ஆசிரியர் அடித்து விட்டதாக தனது தாயாரிடம் கூறி அழுத நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தார்.

இதனை அடுத்து ஆசிரியர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ஆசிரியரிடம் காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைவருக்கும் கல்வி திட்டம்.. ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்