Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைக் குழந்தைகளுடன் போராடுவதை பார்த்து முதல்வர் வேதனைப்படுகிறார் - ராஜேந்திர பாலாஜி

Advertiesment
CAA
, திங்கள், 2 மார்ச் 2020 (17:11 IST)
கைக் குழந்தைகளுடன் போராடுவதை பார்த்து முதல்வர் வேதனைப்படுகிறார் - ராஜேந்திர பாலாஜி

சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் டெல்லியில்  போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்ததில், வன்முறை தாண்டவம் ஆடியது. இதில், 40க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
 
தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடம் நடத்தினர். சில மாவட்டங்களிலும் இஸ்லாமியர் போராடி வருகின்றனர்.
 
இதுகுறித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புதூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
 
சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை;இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு  வந்தால் முதல்வர் தடுப்பார். இஸ்லாமியர்களை தூண்டி தெருவில் இழுத்துவிட்டது திமுக கட்சிதான். அதனால் கைக் குழந்தைகளுடன் பெண்கள் போராடுவதைப் பார்த்து முதல்வர் வேதனையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைய சாத்தியாச்சு நடைய கட்டு: சசிகலாவை துறத்தும் அதிமுக!