Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (12:41 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நிலைமை பரபரப்பாக மாறியுள்ளது.
 
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தனியார் சுரங்க நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
 
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி, வீணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொச்சி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
 
இந்த சூழ்நிலையில், மகள்மீது லஞ்சக் குற்றச்சாட்டு இருப்பதால், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக வலியுறுத்தி வருகின்றன.
 
இது தொடர்பாக, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியபோது, "பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே விசாரணை நியாயமாக நடக்கும். அவர் பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், இதற்காக பாஜக போராட்டங்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments