Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி..! ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனம்..!!

Senthil Velan
திங்கள், 1 ஏப்ரல் 2024 (13:45 IST)
தேர்தல் தோல்வி பயம் காரணமாக கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
 
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மோடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை திசை திருப்புகிறார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
 
கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், கச்சத்தீவுக்கு எதிராக தமிழகம் முழுவதும், திமுக கூட்டம் நடத்தியது, நானும் அப்போது பங்கேற்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது ரூ.34,000 கோடி கொடுத்தவர் பிரதமர் மோடி என குறிப்பிட்ட ஆர் எஸ் பாரதி, இலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ALSO READ: ஜனாதிபதிக்கு அவமரியாதை..! மோடிக்கு கனிமொழி கண்டனம்..!
 
இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுத்த போது, குடியரசு தலைவரை அவமதித்துள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments