Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் மீது தமிழ்நாடு அரசு புகார்! நடவடிக்கை எடுத்த குடியரசு தலைவர்!?

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (12:23 IST)
ஆளுனர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகாரை குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஆளும் திமுக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையில் சில வார்த்தைகளை பேசாமல் விட்டதும், அதை தொடர்ந்து முதல்வர் ஆளுனருக்கு எதிராக தீர்மான நிறைவேற்றியதால் ஆளுனர் வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் சட்டமன்றத்தில் ஆளுனர் மரபு மீறி நடந்து கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபெதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் நேரடியாக குடியரசு தலைவரிடம் அளித்தனர்.

இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகாரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments