Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் திரெளபதி முர்மு: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே சந்திப்பு!

draupathi eps
, சனி, 2 ஜூலை 2022 (18:22 IST)
சென்னையில் திரெளபதி முர்மு: ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே சந்திப்பு!
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று சென்னை வந்து அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். 
 
இம்மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரெளபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களும் போட்டியிடுகின்றனர் 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யஷ்வந்த் சின்கா சென்னை வந்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வந்தார் 
 
அவரை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியின் நகையை திருடி புல்லட் வாங்கிய கணவன் கைது!