Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 11 பேருக்கு அரிவாள் வெட்டு

பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல்: 11 பேருக்கு அரிவாள் வெட்டு
, புதன், 20 ஜூலை 2016 (10:46 IST)
சென்னை பச்சையப்பன் கல்லுரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டத்தில், 11 பேர் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்தனர்.


 

 
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் மோதல் ஏற்படுவது அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டிருப்பது ஒரு வரலாறாக மாறி வருகிறது.
 
நேற்று மாலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் சென்ற ரயிலில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பிரச்சணை ஏற்பட்டது.
 
இதில் மாநிலக் கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் 11 மாநில கல்லூரி மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு