Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:16 IST)
கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார்.
 
முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள்.
 
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் விஜயகாந்தை மாதிரி தைரியமாக களத்தில் இறங்கி மக்களுக்காக போராடக்கூடிய வீரராக வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும்.
 
மைக்கை பார்த்தாலே பயமாக இருக்கிறது, பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்கிறவங்க வீட்டில் இருக்க வேண்டியது தானே? ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவிட்டரில் ஆட்சி செய்ய முடியாது. உங்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
 
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இப்படி கடுமையாக விளாசித்தள்ளிய பிரேமலதா விஜயகாந்த் மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments