பாஜக அமைச்சர்களை திமுக எம்பிக்கள் சந்திப்பது ஏன்? பிரேமலதா

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (21:51 IST)
கடந்த மக்களவைத் தேர்தலை 37 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் அவ்வப்போது பாஜக மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜக அமைச்சர்களை திமுகவினர் சந்தித்தது ஏன் என்பது குறித்து வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
 
பாஜகவை பிடிக்காது என்றும் பாஜக ஆட்சியை எதிர்த்துக் கொண்டும் வரும் திமுகவினர் மத்திய அமைச்சர்களை சந்திப்பது தங்களுடைய சொந்த காரியங்களை சாதித்துக் கொள்வதற்குத்தான் என்றும், மத்திய அமைச்சர்களை திமுகவினர் சந்திப்பது தமிழக மக்களுக்காக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய பிரேமலதா இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு தரும் ஒரே கூட்டணியில் அதிமுக கூட்டணி என்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழனாக விஜயகாந்த் மட்டுமே இருந்து வந்தார் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக இலவச அரிசி வழங்கியவர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்கல் என்றும் மக்களுடன் நடிக்க தெரியாதவர்கள் என்றும் பிரேமலதா கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments