Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சுபஸ்ரீ இறக்கவேண்டும் என்பது விதி”.. அதிமுகவுக்கு முட்டு கொடுக்கும் பிரேமலதா

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (13:05 IST)
சுபஸ்ரீ எதிர்பாராத விபத்தில் இறந்ததை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கியது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.

மேலும் எதிர்கட்சியினர் இதனை வன்மையாக கண்டித்தும் வந்தனர், இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”சுபஸ்ரீ உயிரிழப்பு எதிர்பாராத நிகழ்வு, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதியே. அதிமுக பேனர் என்பதால், எதிர்கட்சிகள் இந்த விபத்தை பெரிதுபடுத்துகின்றனர்.

சுபஸ்ரீ உயிரிழந்ததை குறித்து தமிழகத்தை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என்று பிரேமலதா கூறியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments