Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் தனித்து போட்டியிட மாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (12:55 IST)
இனிமேல் தேமுதிக தனித்துப் போட்டியிடாது என்றும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கும் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
 விருதுநகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அப்போது ’தேர்தல் கூட்டணி குறித்து செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசனை செய்வோம் என்றும் அதன்பிறகு தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை தெரிவிப்பார் என்றும் கூறினார் 
 
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்றும் தேர்தலில் இனிமேல் தனித்து போட்டியிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக மீது பல்வேறு கண்டனங்கள் தெரிவித்த அவர் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் ஆட்சியை பிடிப்பது போல் தமிழகத்திலும் ஆட்சி செய்ய பாஜக நினைக்கிறது என்று கூறினார். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments