Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை! – சுகாதாரத்துறை அதிகாரிகள்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:31 IST)
நேற்று கொரோனா பரிசோதனைக்கு பிரேமலதா செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அவருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா பிரச்சாரத்திற்கு சென்றிருந்த நிலையில் அவரை கொரோனா சோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அழைப்பை மறுத்து பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரச்சாரம் முடிந்த பின் பிரேமலதா கொரோனா சோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments