Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: லாக்டவுனா?

மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: லாக்டவுனா?
, வியாழன், 25 மார்ச் 2021 (07:15 IST)
மும்பையில் ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
மும்பையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நகரத்தில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நேற்று ஒரே நாளில் மும்பையில் மட்டும் 5,155 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது.  இதனை அடுத்து மும்பையில் வரும் 28 மற்றும் 29 தேதி கொண்டாட திட்டமிட்டு இருந்த ஹோலி பண்டிகைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது 
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு 31 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து விரைவில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களுடன் தான் அமமுக கூட்டணி வைத்துள்ளது: விஜயபிரபாகரன்