Publish Date: Tue, 24 May 2022 (22:24 IST)
Updated Date: Tue, 24 May 2022 (22:29 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப்பரவிய நிலையில் இதன் 4 ஆம் தொற்று விரைவில் வரவுள்ளதாக ஆய்வாளர்கல் எச்சரித்தனர்.
இந்த நிலையில், ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குரங்கு அம்மை தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குரங்கு அம்மையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய் அமெரிக்காவில் பரவியுள்ளது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.