Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரஷாந்த் கிஷோர் பதிலடி !

பிரதமர்  மோடியின் கருத்துக்கு பிரஷாந்த் கிஷோர் பதிலடி !
, வெள்ளி, 11 மார்ச் 2022 (15:48 IST)
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்திற்கு தேர்தல்  வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,  உத்தரபிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.

மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக தான் உத்தரபிரதேசத்திலும் உத்தராகண்டிலும் , மணிப்பூரிலும் கோவாவிலும் ஆட்சியில் இருந்தது. இதனால் பாஜக வை  வீழ்ந்த காங்கிரஸ் , சமாத்வாதி , ஆம் ஆத்மி, திரினாமுள்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்  நேற்று  வெளியானது. இதில், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மா நிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலை  மானில அளவிலான தேர்தலுடன் ஒப்பிடக்கூடாது எனவும் தேர்தல் நடக்கும்போது பார்க்கலாம் என  பிரதமர் மோடி கருத்துக் கூறியிருந்தார்.

இதற்கு தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் 5 மா நிலத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி, மக்களை ஏமாற்றும் வகையில் புத்திசாலித்தனமாகப் பேசுகிறார் என  விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது: சுப்பிரமணியன் சுவாமி