Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: தேர்தலை புறக்கணிக்க ஏகனாபுரம் மக்கள் முடிவு

Siva
செவ்வாய், 26 மார்ச் 2024 (09:16 IST)
சென்னை அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த திட்டத்தை கைவிட கோரி அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி ஏகனாபுரம் என்ற கிராமத்து மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல ஏக்கர் நிலங்கள் விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 13 கிராம மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் மற்ற கிராமங்களிலும் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments