Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (18:45 IST)
மருத்துவர்கள் இன்றி பிரேதப் பரிசோதனை செய்த ஊழியர்கள் ! வைரலாகும் வீடியோ

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு  அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் இல்லாமலேயே ஊழியர்கள் பிரேதப் பரிசோதனை செய்ததாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. 
 
தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் நிகழும் விபத்துகளில் இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்.  இந்த நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி சமூக வலைதளங்களில் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 
 
அதில், மருத்துவர்கள் இல்லாமலேயே  ஊழியர்களே சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்தனரா. இல்லை தற்கொலை செய்யப்பட்டனரா, கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த உண்மையை அறிவதற்குத்தான் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்கள் பரிசோதனை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments