Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் vs ஓபிஎஸ் : முற்றும் போஸ்டர் மோதல் !

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:48 IST)
ஈபிஎஸ்க்கு எதிராக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

 
சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே முரண்பாடு நிலவுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியைடைந்ததற்கு ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதே காரணம் என குற்றம் சாட்டியுள்ளதோடு, தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ புறக்கணித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து ஈபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுக பொறுப்பாளர்கள் என்ற பெயரில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக ஒபிஎஸ் போட்டோவுடன் நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக ஈபிஎஸ்சை தேர்வு செய்த எம்.எல்.ஏகளுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments