Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறுக்கிகள் காண்டாமிருக தோலும், கோவேறு கழுதை மூளையும் உடையவர்கள்: மீ(சீ)ண்டும் சு.சுவாமி

பொறுக்கிகள் காண்டாமிருக தோலும், கோவேறு கழுதை மூளையும் உடையவர்கள்: மீ(சீ)ண்டும் சு.சுவாமி
, புதன், 8 மார்ச் 2017 (13:08 IST)
பொறுக்கிகள் பற்றி கவனிக்க வேண்டிய ஒன்று, அவர்கள் காண்டாமிருக தோலும், கோவேறு கழுதை மூளையும் உடையவர்கள் என சுப்ரமணியன் சுவாமி மீண்டும் சீண்ட தொடங்கியுள்ளார்.


 

 
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை சுப்ரமணியன் சுவாமி பொறுக்கிகள் என குறிப்பிட தொடங்கினார். அதைத்தொடர்ந்து இன்று வரை தமிழர்கள் குறித்து பேசினாலே பெறுக்கிகள் என்றுதான் கூறி வருகிறார். 
 
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்திருந்தார். அதில், பொறுக்கிகள் கட்டுமரங்களை எடுத்துக்கொண்டு சென்று இலங்கையுடன் சண்டையிடுங்கள், என தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து பொறுக்கிகள் பற்றி குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். பொறுக்கிகள் காண்டாமிருக தோலையும் கோவேறு கழுதை மூளையையும் கொண்டுள்ளனர். டிவிட்டரில் பயங்கரமாக அடி வாங்கினாலும், அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள், என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய- பாகிஸ்தான் எல்லை மூவர்ணக்கொடியில் ஹிட்டன் கேமரா: கதிகலங்கும் பாகிஸ்தான்!!