Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ரத்தாகும் என்பதை எதிர்பார்த்தோம்: பூண்டி கலைவாணன்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (08:04 IST)
திருவாரூர் தேர்தல் ரத்தாகும் என்று ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தோம் என்று திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என கணிக்க முடிந்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சியோடுதான் இயங்குகிறதா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தபோது அதிமுக-பாஜக மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்? பாஜக ஆயிரம் வாக்குகளைக்கூட வாங்காது என்பதால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் ரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும்தான் காரணம் என்றும் அவர்களுக்கு தெரிந்துதான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே திருவாரூர் தேர்தல் நடத்த இது உகந்த நேரம் இல்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments