Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (18:04 IST)
சென்னையில் நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் வழித்தடம் வரும் டிசம்பர் மாதத்தில் பயணத்திற்காகத் தயாராகும் என மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் அறிவித்துள்ளார்.
 
மொத்தம் 116 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களாக 2-ஆம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் பாதை முக்கியமானதாகும். கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்க பாதையாகவும், பவா ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால பாதையாகவும் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
 
இதில், பூந்தமல்லி - போரூர் இடையே இருக்கும் பாதையில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பகுதியில் டிசம்பரில் சேவை தொடங்க உள்ள நிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்த வாரங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன.
 
இன்று நடைபெற்ற மூன்றாவது சோதனை ஓட்டத்தில், பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ. தூரம், மணிக்கு 20-25 கி.மீ. வேகத்தில் ஓட்டப்பட்டது. இந்த முறையில் டவுன் லைனில் ஓட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்துக்குள் முழு வேக சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது.
 
இதனையடுத்து, பூந்தமல்லி – போரூர் மெட்ரோ டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments