அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (19:04 IST)
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் குவாரிகளில் மண் எடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் பொன்முடி மேல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் பொன்முடி யிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவருக்கும் சொந்தமான ரூ.14.21 புள்ளி கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments