Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் கோடியை தாண்டும் வசூல்? பொங்கல் டாஸ்மாக் விற்பனை!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (11:42 IST)
பொங்கலையொட்டி தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ள நிலையில் விழாக்கால வசூல் ஆயிரம் கோடியை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் காரணமாக இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை முதலாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

வெள்ளி, சனிக்கிழமைகளில் இருந்த விற்பனையை விட பொங்கல் அன்று ஞாயிற்றுக்கிழமை அதிக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்று திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் முதல் நாளே பலரும் மொத்தமாக மதுபானங்களை வாங்கியதாக தெரிகிறது.

மொத்தமாக கடந்த 4 நாட்களுக்குள் மதுபான விற்பனை ரூ.800 கோடியை தொட்டிருக்கலாம் என்றும், இன்றைய விற்பனையை சேர்ந்து ரூ.1000 கோடியை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments