Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம்..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:36 IST)
பொங்கல் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்பும் பொதுமக்கள் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கு இன்று முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 10ஆம்  தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்க இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டு  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் இன்று 10 மணிக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments