Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

பொங்கல் பரிசுக்கும் விநியோகத்திற்கும் டோக்கன்...!

Advertiesment
தமிழகம்
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:02 IST)
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் சேராத வகையில் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை முன்கூட்டியே குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை திருவொற்றியூர் இடியாத வீடுகளில் இருந்தும் வெளியேறும் மக்கள்!