Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கா? ஜல்லிக்கட்டா? - இதுவல்லவா பட்டிமன்றத்தின் தலைப்பு

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (16:43 IST)
பொங்கல் பண்டிகையின் போது மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
சென்னையை மையமாக கொண்டு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. குடிப்போருக்கு புணரமைப்பு, குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு என்ற கொள்கையயை முன்னிறுத்தி செயல்படும் இந்த அமைப்பு குடிப்பவர்களுக்கு ஆதரவாக சிரிப்பை வரவழைக்கும் அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில், வருகிற 15ம் தேதி பொங்கலின் போது இந்த சங்கம் சார்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. “பொங்கல் திருவிழாவின் போது தமிழர்கள் பெரிதும் விரும்புவது சரக்கா, ஜல்லிக்கட்டா” என்பதுதான் அவர்கள் வைத்துள்ள தலைப்பு.
 
சென்னை கொரட்டூரில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்திற்கு இந்த சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் நடுவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரைக்கும் பல தலைப்புகளில் பட்டிமன்றத்தை பார்த்த தமிழர்களுக்கு இந்த பட்டிமன்றம் சிரிப்பை வரவழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments