Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிபொருள் விலை உயர்வு: திமுக போராட்டம்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (15:38 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து புதுச்சேரியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனவும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து திமுகவினர் மாட்டு வண்டியிலும், ஊர்வலமாகவும் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவையை நோக்கி சென்றனர்.
 
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, திமுகவினர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசியோடு உணவுக்கு காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பரிதாப பலி..!

70 வயது முதியவர் மேல் சாய்ந்த தவெக பேனர்! தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவு!

புஷ்வானமான போர் நிறுத்தம்..? மீண்டும் இஸ்ரேலில் குண்டு மழை? - ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கை!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments