Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்: பொன்னார் எச்சரிக்கை

வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்: பொன்னார் எச்சரிக்கை
, ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (09:36 IST)
சமீபத்தில் வைகோ கன்னியாகுமரி மாவட்டத்தில் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பாஜகவினர் அவருக்கு கருப்புக்கொடி காட்டினர். மேலும் வைகோ வேன் மீது கல்வீச்சும் நடைபெற்றது. அப்போது வைகோ மிக ஆவேசமாக தன்மீது கல்வீசியவர்கள் பாஜகவின் கைக்கூலிகள் என்று பேசினார்.
 
வைகோவின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்மீது கல்வீசியது பாஜக கைக்கூலிகள் என வைகோ கூறியது அநாகரீமான வார்த்தைகள் என்றும் கூறினார்.
 
webdunia
மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஆலைகளை உடனே மூடவேண்டும் என்றால் அது சாத்தியமில்லை' என்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் நடக்கவிருந்த போராட்டம் சேப்பாக்கத்திற்கு மாற்றம்: வேல்முருகன்