Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முரசொலி நிலத்தை திரும்ப கொடுங்கள்.. 5 கோடி தருகிறோம்” ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன்னார்

Arun Prasath
திங்கள், 18 நவம்பர் 2019 (12:37 IST)
பஞ்சமி நிலம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிற முரசொலி நிலத்தை ஸ்டாலின் திரும்ப கொடுத்தால், அவருக்கு 5 கோடி தர பாஜக தயாராக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

சமீபத்தில் அசுரன் திரைப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பஞ்சமி நில மீட்பை பேசும் அசுரன் திரைப்படம் படல் அல்ல, பாடம்” என பகிர்ந்தார். ஸ்டாலினின் டிவிட்டை குறிப்பிட்டு, பாமக தலைவர் ராமதாஸ், “அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்திற்காக வலைக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என அந்த நிலத்திற்குரிய பட்டாவை காட்டினார்.

இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்” திமுக அறைக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என கூறப்படுகிறது. அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் ஸ்டாலின அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என கூறினார்.

மேலும், “முரசொலி நிலம் 5 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. ஸ்டாலின் அந்த நிலத்தை அரசுக்கு கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு 5 கோரி இழப்பு என்றால், அந்த 5 கோடியை பாஜக தர தயாராகவுள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments