Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தமிழர்களை பற்றி அப்படி கூறவேயில்லை”.. அந்தர் பல்டி அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Arun Prasath
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:20 IST)
நான் தமிழர்களை நன்றி மறந்தவர்கள் என்று கூறவேயில்லை, அரசியல்வாதிகளை தான் அவ்வாறு கூறினேன் என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மோடி சமஸ்கிரதத்தை விட தமிழ் தான் பழமையான மொழி என கூறியதை தமிழர்கள் யாரும் கொண்டாடவில்லை என்ற காரணத்தால் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழர்கள் நன்றி கெட்டவர்கள்” என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது இதனை பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

அதாவது, தமிழ்மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளையே அவ்வாறு கூறியதாகவும், ஒட்டு மொத்த தமிழர்களையும் தான் அவ்வாறு கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பொன்.ராதகிருஷ்ணனின் இந்த மறுப்பு குறித்து சர்ச்சையிலிருந்து தப்பிப்பதற்கே இவ்வாறு கூறுகிறார் என்றுபலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்களை நன்றிகெட்டவர்கள் என்று கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments