Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆதரவளிக்கும் கட்சிதான் வெற்றிபெறும் – பொன்னார் குழப்பமான பதில் !

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:38 IST)
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, இதுவரை அதிமுகவுக்கு ஆதரவளிக்காத நிலையில் தற்போது குழப்பமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதில் காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக மற்றும் தமாக ஆகியவை ஆதரளவு அளித்துவிட்டன. மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அமைச்சர்கள் சென்று ஆதரவு பெற்றுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் இருக்கும் பாஜக மட்டும் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்  ‘நாங்குநேரி தொகுதியை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்கவில்லை. இடைத்தேர்தல் தொடர்பான முடிவுகளை அகில இந்தியத் தலைமைதான் எடுக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்’ எனத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்குள் இருந்துகொண்டே அவர் இவ்வாறு பேசியிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments