Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி பிரச்சனை தீரும்வரை திரைப்படங்கள் வெளியிடாமல் இருக்க தயாரா? பொன்னார் கேள்வி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (10:09 IST)
ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று கூறும் திரையுலகினர் காவிரி பிரச்சனை தீரும் வரை திரைப்படங்களை வெளியிடாமல் இருக்க தயாரா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்புயுள்ளார். 
 
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று நேற்று பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கோரிக்கை வைத்தனர். இன்னும் ஒருசிலர் ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரி போராட்டத்தை திசைதிருப்பும் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் என்று கூறும் திரையுலகினர் காவிரி பிரச்சனை முடியும் வரை திரைப்படங்கள் வெளியிடாமல் இருக்க தயாரா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்காக மாதக்கணக்கில் வேலைநிறுத்தம் செய்யும் திரையுலகினர், காவிரி பிரச்சனைக்காக அரைநாள் மட்டுமே அறப்போராட்டம் நடத்தியதாகவும், அதிலும் ஒற்றுமை இல்லாமல் பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்றும் ஏற்கனவே நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரையுலகினர் என்ன பதில் சொல்ல போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments