Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண் மரணம் கொடுஞ்செயல்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (08:44 IST)
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது காவல்துறை ஆய்வாளர் காமராஜ் நடத்திய தாக்குதலால் அப்பாவி கர்ப்பிணி பெண் உஷா பலியானார்.

இந்த நிலையில் கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் நேற்றிரவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜூக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியபோது இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்த கொடும் செயலுக்கு காரணமான அதிகாரி மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திருவெறும்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. கழக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவையேற்று டி.ஜி.பியிடம் பேசி சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். அவரும் உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments