Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.மாணிக்கவேல் பதவிக்காலம் முடிவு! – ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (15:28 IST)
சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்த பொன்.மாணிக்கவேல் பதவிகாலம் முடிந்ததை அடுத்து ஆவணங்களை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பழம்பெரும் கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் பலவற்றை சிலை திருட்டு கும்பல் களவாடி சென்றபோது அவற்றை கண்டுபிடித்து மீட்க சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டவர் பொன்.மாணிக்கவேல். இதுவரை வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருந்த தமிழக சிலைகள் பலவற்றை மீட்டுக் கொண்டு வந்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.

தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து திரும்ப வழங்க இருப்பதாகவும் பொன்.மாணிக்கவேல் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. பொன்.மாணிக்கவேலை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

பணிக்காலம் முடிந்த பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments