Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக 24 இடங்களில் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்கள் - மாசுக்கட்டுப்பாடு வாரியம் முடிவு

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (17:35 IST)
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிதாக 24 இடங்களில் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு  சமீபத்தில் பதில் கூறிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ,’’நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது; தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளது என்று  கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிதாக 24 இடங்களில் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் மொத்தம் 34 இடங்களில் தொடர்காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும், 24 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 24 இடங்களில் அமைக்க உள்ளதாகவும், அதன் மூலம்  நிகழ்  நேரத்தில் காற்றின் தரத்தைச் சோதித்தறிய உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments