தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (20:51 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் முகாம் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த வருடம் சிறிது காலதாமதம் ஆனாலும் தற்போது போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் ஜனவரி 31ல் நடைபெற உள்ளதாக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 56 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனா அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள், கொரோனா தொற்று பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments