Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை ஏறி.. புத்தி மாறி.. தன் வீட்டுக்கே தீ வைத்த காவலர்!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (12:01 IST)
கன்னியாக்குமரியில் மதுபோதையில் காவலர் ஒருவர் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் கோணம் காடு பகுதியை சேர்ந்தவர் அருள் ஜாக்சன். காவலராக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அருள் ஜாக்சன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இப்படியாக சண்டை நீண்டு கொண்டிருந்த நிலையில் நேற்று இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர் தன்னிலை மறந்து வீட்டை கொளுத்திவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அருள் ஜாக்சனை போலீஸார் தேடி வரும் நிலையில், ஏற்கனவே அருள் ஜாக்சன் திருநெல்வேலி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது குடிபோதையில் தகராறு செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

ஆதார் , யுபிஐ வெற்றிக்கு பின் டிஜிட்டல் முகவரி திட்டம்.. மத்திய அரசு அசத்தல்..!

ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி சென்செக்ஸ் நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments