Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆத்தாடி.. மின்னல் வேகத்துல வறாரே.. தெறித்து ஓடிய திருடர்கள்! – சினிமாவை மிஞ்சிய சேஸிங்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (11:18 IST)
கோவையில் சூலூர் அருகே பைக் திருடர்களை காவல் ஆய்வாளர் துரத்தி சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே நள்ளிரவில் காவல் ஆய்வாளர் மாதையன் ரோந்து வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருவர் நிற்பதை கண்ட அவர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது திடீரென அவர்கள் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

உடனே தனது ரோந்து காரில் அவர்களை துரத்தி சென்றுள்ளார் மாதையன். சிறிது தூரம் சென்றதும் அவர்கள் பைக்கை விட்டுவிட்டு ஓட்டமாய் தப்பி ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை விடாத மாதையன் தானும் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் அவர்களை துரத்தி சென்று பிடித்துள்ளார். அதில் ஒருவர் பிடிபட ஒருவர் தப்பியுள்ளார்.

விசாரனையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிஹரசுதன் என்றும், அவர் சங்கர் என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தப்பி சென்ற சங்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments