Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:18 IST)
காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரி மனைவியிடமே போதை ஆசாமி ஒருவர் சில்மிஷம் செய்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பிரபாகரன் பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் முன் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த போதை ஆசாமி அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார். 
 
இதனை அடுத்து அந்த பெண் அலறிய நிலையில் அந்த பகுதியில் இருந்த காவலர்கள் உடனடியாக அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த நிலையில் அதன் பின் அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
இதன் பின்னர் அந்த போதை ஆசாமி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரம்பலூர் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments