Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் பேவில் நூதன மோசடி.. தமிழக காவல்துறை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (18:05 IST)
தற்போது ஏராளமானோர் கூகுள் பே என்ற செயலியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து வரும் நிலையில் அதில் நூதனமான மோசடி நடப்பதாக தமிழக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
 
தற்போது புதிய மோசடி ஜிபேவில் தொடங்கியுள்ளது. யாரோ ஒருவர்‌ தெரிந்தே உங்கள்‌ கணக்கு அல்லது கூகுள்பேவுக்கு பணத்தை அனுப்புகிறார்‌, மேலும்‌ உங்கள்‌ கணக்கில்
தவறுதலாக பணம்‌ அனுப்பி இருந்ததாக உங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைக்கிறார்,
 
மேலும்‌ பணத்தை அவர்களின்‌ எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார்‌. நீங்கள்‌ பணத்தை திருப்பி அனுப்பினால்‌, உங்கள்‌ கணக்கு ஹேக் செய்யப்படும்‌. எனவே, யாராவது உங்கள்‌ கணக்கில்‌ தவறாக‌ பணம்‌ பெற்றிருந்தால்‌,அழைப்பாளரிடம்‌ அடையாளச்‌ சான்றுடன்‌ அருகிலுள்ள காவல்‌ நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக்‌ கொள்ளச்‌ சொல்லுங்கள்‌. இந்த மோசடி இப்போதுதான்‌ தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில்‌ கொள்ளவும்‌.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள் இறக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. சீமான் ஆதரவு..!

தனக்குத்தானே கருத்தடை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் அதிபரான சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த விவேக் ராமசாமி: என்ன காரணம்?

தலைமை ஆசிரியருடன் பெண் ஆசிரியை உல்லாசம்.. சிசிடிவி காட்சி பார்த்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments