Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை அறைந்த போலீஸ்; வைரல் வீடியோ

Advertiesment
மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்ணை அறைந்த போலீஸ்; வைரல் வீடியோ
, செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:49 IST)
திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பெண்ணின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும் கூட்டம் கலையாததால் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதையடுத்து தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு, காவல்துறைக்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காக்க வைத்து கதவை சாத்திய தீபா - காரில் ஏறிப்போன மாதவன்