Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஸ்போர்ட்டுடன் ஆஜராக வேண்டும் - சோபியாவுக்கு போலீஸ் சம்மன்

பாஸ்போர்ட்டுடன் ஆஜராக வேண்டும் - சோபியாவுக்கு போலீஸ் சம்மன்
, புதன், 5 செப்டம்பர் 2018 (17:20 IST)
ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ள சோபியாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகியுள்ளார்.
 
அதேபோல், தன் மகள் சோபியாவுக்கு தமிழிசை மற்றும் அவருடன் இருந்த பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், சோபியா தன் அசல் பாஸ்போர்ட்டுடன் வருகிற 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி செய்து விட்டாளே பாவி! - அபிராமியின் கணவர் விஜய் கதறல்