Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:42 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குட்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் திருப்பூரில் உள்ள லிங்கம் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அதிரடியாக லிங்கம் என்பவரின் கிட்டங்கில் சோதனை செய்த போலீசார், பலமணி நேரம் சோதனைக்கு பின்னர் கிடங்கில் இருந்து 1 டன் குட்கா பொருட்கள் மற்றும் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் கிடங்கு உரிமையாளர் லிங்கம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த குட்கா மற்றும் பட்டாசு பொருட்கள் அவருக்கு சொந்தமானதா? அல்லது பினாமியாக அவர் இந்த பொருட்களை பாதுகாத்து வைத்திருக்கின்றாரா? என்ற ரீதியில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments