Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமி: தப்பி ஓடிய ஆப்பரேட்டர்! – சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (09:49 IST)
சென்னையில் ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமியை மீட்காமல் தப்பிய ஓடிய ஆப்பரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு உள்ள ராட்டினம் ஒன்றில் சிறுமி ஏறியுள்ளார். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கி கொண்டது. அருகிலிருந்தவர்கள் கூச்சலிடவும் ராட்டினத்தின் ஆப்பரேட்டர் தப்பித்து ஓடி விட்டார்.

சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் சிறுமியை காப்பாற்றாமல் ஓடிய ஆபரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments