Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் அரிசியை ரோட்டில் கொட்டிய நபர்! – வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (14:22 IST)
ரேசன் கடையில் கொடுத்த அரிசி சரியில்லை என சாலையில் கொட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டிணம் அருகே பெருமாள் கோவில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் ரமணி என்பவர் அரிசி வாங்கியுள்ளார். வாங்கிய அரிசி தரமற்றதாகவும், குண்டாக இருப்பதாகவும் புகார் தெரிவித்து பணியாளர்களோடு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருதரப்பினருக்கிடையே விவாதம் வளரவே கோபமடைந்த ரமணி தான் வாங்கிய அரிசியை சாலையிலேயே மூட்டையோடு கொட்டியுள்ளார். இதை அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதை சமூக வலைதளங்களில் பதியுமாறு அவரே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ரமணி அரசு வழங்கும் இலவச அரிசியை சாலையில் கொட்டியது குறித்து ரேசன் கடை பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீஸார் ரமணியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments