Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாடுகள்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (17:33 IST)
2022ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்னும் மூன்று நாள்களில் உள்ளதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
 
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாட அனுமதி இல்லை என்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்றும் மீறினால் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 31ஆம் தேதி இரவு மற்றும் புத்தாண்டின் போது கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் குளிக்கக் கூடாது என்றும் பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments