Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்துவிட்டோம்: கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (17:40 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினர் விசாரணை செய்தபோது 'கொள்ளையடித்த பணம் முழுவதையும் சரிசமமாக பிரித்து செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கொள்ளை நடந்த மூன்றே மாதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் முழு பணத்தையும் செலவு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி வரும் போலீசார் அவர்களிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையடித்த பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments