Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் கள்ளக்காதல் தகராறு: ஒருவர் குத்திக்கொலை

போலீஸ் கள்ளக்காதல் தகராறு: ஒருவர் குத்திக்கொலை
, திங்கள், 6 மார்ச் 2017 (11:34 IST)
திருவள்ளூரில் கள்ளக்காதல் தகராறில் பெண் போலீஸ் வீட்டில் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை  செய்துள்ளார். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
திருவள்ளூர் மாவட்டம் ஆயுதப் படை பிரிவில் பணிபுரியும் சரண்யா(22) கல்லணை(24) மற்றும் அமிர்தராஜ்(24) ஆகியோருடன் பழகி வந்துள்ளார். சரண்யா கணவர் காஷ்மீரில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களின் பழக்கம் நாளடையில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
 
சரண்யவிடம் பழகுவதற்காக கல்லணையும், அமிர்தராஜூம் போட்டி போட்டுக்கொண்டனர். இருவருடனும் சரண்யா உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கல்லணை, அமிர்தராஜை எச்சரித்து உள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் அமிர்தராஜ் வழக்கம் போல் சரண்யாவை சந்திக்க வந்துள்ளார். இதை அறிந்த கல்லணை தனது நண்பர்களுடன் மது போதையில் சரண்யா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
 
அங்கு அமிர்தராஜீடன் கல்லனை நண்பர் ஒருவர் சண்டை போட்டுள்ளார். இதில் அமிர்தராஜ் தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். கல்லணை நண்பர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதைக்கண்ட கல்லணை மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்று உயிரை விட்ட குடிகாரர் - வீடியோ!