Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடான் குற்றவாளிக்கு உதவி செய்த சென்னை போலீஸ்!!! குவியும் பாராட்டுக்கள்...

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (08:19 IST)
சிறையில் இருந்து வெளியே வந்த சூடான் குற்றவாளி சொந்த நாடு திரும்ப சென்னை போலீஸார் உதவி செய்துள்ளனர்.
சூடான் நாட்டை சேர்ந்த முகமது அல் முஸ்தப்பா என்ற வாலிபர் கடந்த 2013ஆம் ஆண்டு நாடப்பட்டிணம் வந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். 2014ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பினார்.
 
பின்னர் தனது கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்த அவர், சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இப்படியே காலங்கள் ஓடின. கடந்த வருட இறுதியில் மெரினாவில் சுற்றித்திருந்த இவரை அப்பகுதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு முஸ்தப்பாவும் அவர்களை தாக்கியுள்ளார்.
 
இதனையடுத்து போலீஸார் முஸ்தப்பாவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 4 மாத சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். இதனையறிந்த காவல் துறையினர், அவருக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர். போலீஸின் இந்த மனிதாபம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments